×

உசிலம்பட்டி அருகே 2 சிறுவர்களை கடித்த நாய்கள்

உசிலம்பட்டி, அக். 28: உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் நேற்று விளையாடிய ராமசாமி – நிவேதா தம்பதியரின் 2 வயது மகன் மற்றும் ஜெயபாண்டி – ஜோதி தம்பதியின் 7 வயது மகன் ஆகியோரை நாய்கள் அடுத்தடுத்து கடித்தன. இதில் சிறுவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி சிறுவர்களை மீட்டனர். பின் சிறுவர்கள் இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மகனை நாய் கடித்ததை கண்டு மயங்கிய நிவேதாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவை வெறிநாய்களாக இருக்கலாம் என்று பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையே கிராமத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,

The post உசிலம்பட்டி அருகே 2 சிறுவர்களை கடித்த நாய்கள் appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Usilampatti ,Ramasamy ,Nivetha ,Sadaiyandipatti ,Dinakaran ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...